எஸ்.ஆர்.எம் திருச்சி செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது 31.01.2024 அன்று கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று தலைமை உரையாற்றி சிறபித்தார். தலைமை விருந்தினராக டாக்டர். என். வெங்கடேஷ் பிரஜனா,இயக்குனர், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை பங்கேற்று தலைமை விருந்தினர் உரையாற்றினார். அவர் உரையில் செவிலியர் பணியின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தினர். டாக்டர். சுஜா சுரேஷ், முதல்வர், திருச்சி செவிலியர் கல்லூரி. வரவேற்புரையாற்றினார். விருந்தினர்கள் குத்து விளக்கேற்ற அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகளின் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் அனைவரும் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். டாக்டர்.என்.சேதுராமன், தலைமை இயக்குனர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) அவர்கள் சிறப்புரையாற்றினார். டாக்டர்.எஸ்.ரேவதி, டீன் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், டாக்டர். என்.பாலசுப்ரமணியன், இணை இயக்குனர், எஸ்.ஆர்.எம் திருச்சி வளாகம், மற்றும் டாக்டர்.என்.மால்முருகன், வளாக இயக்குனர், எஸ்.ஆர்.எம் திருச்சி வளாகம், அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.
